Tuesday 30 October 2012

BBC Life - Flying Fish


சாப்பாடு விஷயத்தில் சாஸ்திரம்... சொல்றதைக் கேளுங்க

தனக்குத்தானே சோறிட்டுக் கொள்வது ஆயுளைக் குறைக்கும். இஞ்சி, பாகற்காய், கஞ்சி, கட்டித்தயிர், இலைக்கறி (கீரை), நெல்லிக்காய் இரவில் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் லட்சுமி அவ்வீட்டில் வாசம் செய்யமாட்டாள். பால்சோறு சாப்பிடலாம். கிழக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் ஆயுள் வளரும். மேற்கு நோக்கினால் பொருள் சேரும். தெற்கு நோக்கினால் புகழ் வளரும். வடக்கு மட்டும் கூடாது. நோய் வரும். சோறு, நெய், உப்பு ஆகியவற்றை கையால் எடுக்கக்கூடாது. கரண்டி வைத்துக் கொள்ள வேண்டும்

Monday 22 October 2012

Diet-டை மேற்கொள்ளும் ஆண்களுக்கான சில டிப்ஸ்

இன்றைய காலத்தில் உடல் எடை அதிகமாகிவிடக் கூடாது என்பதற்காக அனைவருமே டயட்டை மேற்கொள்கின்றனர்.
மேலும் டயட் மேற்கொண்டால், உடலில் எந்த ஒரு நோயும் எளிதில் வராமல் தடுக்கலாம். அவ்வாறு டயட் மேற்கொள்ளும் போது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு உணவுகளில் வேறுபாடுகள் இருக்கும்.

எனவே தான் டயட் மேற்கொள்ளும் ஆண்கள் தவறாமல் ஒருசில உணவுகளை தினமும் உடலில் சேர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தக்காளி

ஆண்களுக்கு மிகவும் சிறந்த பழங்களில் ஒன்று தக்காளி. ஏனெனில் இதில் உள்ள லைக்கோபைன் என்னும் பொருள், உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கும்.

ஆகவே இதனை தினமும் உண்ணும் உணவில் சேர்த்தால், பெருங்குடல் புற்றுநோய் மற்றும் இதய நோய் ஏற்படாமல் தடுக்கலாம்.

பிரேசில் நட்ஸ்

நெட்ஸ் என்றால் உடலுக்கு நல்லது என்பது தெரியும். அதிலும் பிரேசில் நட்ஸ் தான் ஆண்களுக்கு சிறந்தது.

ஏனெனில் அதில் செலினியம் எனும் பொருள் அதிகம் உள்ளது. அதனால் ஸ்பெர்ம்களின் அளவு அதிகரிக்கும்.

மேலும் செலினியம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, உறவு கொள்ள ஆர்வத்தை தூண்டும் ஒரு சிறந்த உணவுப் பொருளும் கூட.

பச்சை காய்கறிகள்

டயட்டில் இருக்கும் ஆண்கள் முட்டைகோஸ், பிராக்கோலி மற்றும் முளைகட்டிய பயிர்களை உணவில் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த உணவுக் பொருட்களில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் கெமிக்கல் இருக்கிறது. அதிலும் புரோடெஸ்ட் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும். ஆகவே தினமும் சிறிது இதனை உணவில் சேர்ப்பது நல்லது.

முட்டை

கூந்தல் உதிர்தல் அதிகமாக இருந்தால் கவலைப்படாமல் முட்டையை மட்டும் தினமும் உணவில் சேர்த்து வந்தால் போதும்.

ஏனெனில் முட்டையில் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் புரோட்டீன் மற்றும் வைட்டமின் பி7 சத்துக்கள் அடங்கியுள்ளன.

மேலும் முட்டையின் மஞ்சள் கருவில் அதிக அளவு இரும்புச்சத்து இருக்கிறது. ஆகவே இரத்த சோகை குறைந்து கூந்தல் உதிர்தல் நின்றுவிடும்.

மாதுளை

மாதுளையில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. அதிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், ஆண்கள் தினமும் உணவில் சேர்க்கும் போது உடலில் உள்ள கொலஸ்ட்ரால் குறைந்துவிடும்.

நிறைய ஆய்வுகளில் மாதுளை ஜூஸை தினமும் குடித்து வந்தால், புரோடெஸ்ட் புற்றுநோய் குறைந்துவிடும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பூண்டு

பூண்டின் நன்மைகளுக்கு அளவே இல்லை. ஏனெனில் இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, இதயத்தில் ஏற்படும் அடைப்பை தடுக்கிறது.

மேலும் இதன் மீது மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் பூண்டு மற்றும் வெங்காயத்தை சாப்பிட்டால், புரோடெஸ்ட் புற்றுநோய் தடைபடும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே இதனை தினமும் உணவில் சேர்ப்பது நல்லது.

சாலமன்

கடல் உணவுகளில் அதிகமான அளவில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. அதிலும் சாலமன் என்னும் மீனில் அதிகம் உள்ளது.

ஆண்கள் இந்த மீனை உணவில் சேர்த்தால், உடலில் ஏற்படும் நோய்கள் பலவற்றிற்கு ஒரு ஆயில்மெண்ட் போன்றது. மேலும் இதை சாப்பிட்டால், மனஅழுத்தம் குறைந்துவிடும்.

நவதானியங்கள்

நவதானியங்களில் வைட்டமின், நார்ச்சத்து மற்றும் கனிமச்சத்து உள்ளன. இது ஆண்கள் மற்றும் பெண்களுக்கும் சிறந்த உணவுப்பொருள்.

ஆண்கள் இதனை உடலில் அதிகம் சேர்த்தால், இதில் உள்ள வைட்டமின் பி9 ஸ்பெர்ம்களை ஆரோக்கியமாக வைக்கும். கூந்தல் உதிர்தலும் நீங்கும்

Saturday 13 October 2012

ஊற்றெடுக்கும் ஊழல் நதி ஆர்.நடராஜன்

ராஜா வீட்டுக் கன்றுக் குட்டி, எவ்வளவு துள்ளினாலும் கண்டிக்கப் படுவதில்லை; ராணி வீட்டுக் கன்றுக் குட்டியும், எவ்வளவு அள்ளினாலும் தண்டிக்கப் படுவதில்லை. அதுதான், ராஜ குடும்பம் பெறும் சலுகை, மரியாதை.

ஜனநாயகம் என்று, சொல்லப்படும் சோனியா நாயகத்தில், இது கூட இல்லாவிட்டால் எப்படி? பங்குதாரராக உள்ள தொலைக்காட்சி நிறுவனத்திற்கு, பெருந்தொகையை, பிணையற்ற கடனாகப் பெற்ற கருணாநிதியின் மகள் கனிமொழி, நிதி முறைகேடு என்ற குற்றச்சாட்டில், திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.அதேபோன்று, பிணையற்ற கடன் பெற்றுள்ள, நாட்டின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனத்தின், டி.எல்.எப்., - டில்லி, பங்குதாரராக இருக்கும் ஒருவர், வெளியே சுதந்திரமாக இருக்கிறார். நாட்டின் எந்த விமான நிலையத்திலும், அவருக்குப் பாதுகாப்பு சோதனைகள் இல்லை.இப்படி ஓசைப்படாமல், சொத்து சேர்த்து வரும், அந்த அதிகோடீஸ்வரர் யார்? வேறு யாருமில்லை; சோனியாவின் மருமகன், ராஜிவின் மகள் பிரியங்காவின் கணவர். அவர் தான் ராபர்ட் வதேரா. இந்த ராபர்ட் வதேராவுக்கு, சில வணிக நிறுவனங்கள், எந்த அடிப்படையில் சகாயம் செய்தன; அவற்றிற்கு, அவர் என்ன செய்தார் போன்ற விவரங்களை, இப்போது அரவிந்த் கெஜ்ரிவாலும், பிரசாந்த் பூஷணும் வெளியிட்டு இருக்கின்றனர். இவரது அபார வளர்ச்சியைப் பார்ப்பதற்கு முன், இவரது குடும்பப் பின்னணி பற்றியும் தெரிந்து கொள்வோமா?

இவர், 1969ம் ஆண்டு பிறந்தவர். தந்தை ராஜேந்தர், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்; தாயார், ஸ்காட்லாந்துப் பெண்மணி. முதலில், இவர் தொழிற்சாலைக் கழிவுப் பொருட்களை வாங்கி விற்றவர். அந்தக் காயலான் கடை வியாபாரத்தில், பெரிய அளவு லாபம் இருக்க முடியாது.ஆனால், கடந்த, 10 ஆண்டுகளில், பெரிய தொழிலதிபராக வளர்ந்திருக்கிறார், அரசியல் தொடர்பால். இவரது முதல் தொடர்பு, போபர்ஸ் பீரங்கி விற்பனைத் தரகரான குட்ரோச்சி. அவர் மூலம், பிரியங்காவின் நட்பு கிடைத்தது. அப்புறம் அபார வளர்ச்சி.இவர், பிரியங்காவைத் திருமணம் செய்து கொண்டது, 1997ல். பின், தொழிலில் ஏறுமுகம். அடுத்த சில ஆண்டுகளில், சந்தேகத்திற்கிடமான சூழலில், இவரது சகோதரர் உயிரிழந்தார். இவரது சகோதரி, ஒரு சாலை விபத்தில் சிக்கி இறந்தார்; தந்தை தற்கொலை செய்து கொண்டார். எல்லாச் செய்திகளுமே, அடக்கி வாசிக்கப்பட்டன.

இந்தக் காலக்கட்டத்தில் தான், ராபர்ட் வதேரா, பிரம்மாண்டமாக வளர்ந்தார்.ராபர்ட் வதேராவுக்கு, டில்லியின் ஹில்டன் கார்டன் ஓட்டலில், பெருமளவு பங்கு உண்டு. பல உள்நாட்டு நிறுவனங்களிலும், கணிசமான பங்குகள் உண்டு. வெளிநாட்டு நிறுவனங்களிலும், வணிகத் தொடர்புகள் உண்டு.குறிப்பாக, டில்லியில் உள்ள, டி.எல்.எப்., என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவர். இது, நாட்டின் மிகப்பெரிய, "ரியல் எஸ்டேட்' நிறுவனம். காமன்வெல்த் போட்டி தொடர்பான கட்டுமான ஒப்பந்தங்கள், இதற்குத்தான் தரப்பட்டன. அதனால் தான், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஊழல் என்று பரவலாகப் பேசப்பட்ட போதும், அப்போதைய ஒலிம்பிக்ஸ் குழுத் தலைவரான சுரேஷ் கல்மாடியை விசாரணை அமைப்புகள் நெருங்கவில்லை.அரசு சட்ட திட்டங்கள், இவருக்கு வளைந்து கொடுத்து, இவரது வளர்ச்சிக்கு உதவுகின்றன. இந்திய விமான நிலையங்களிலும், வெளிநாடுகளிலும் உள்ள இந்தியத் தூதரகங்களிலும், இவருக்குத் தனிச் சலுகை, எழுத்துப் பூர்வமாகத் தரப்பட்டிருக்கிறது.

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் முதலிய, 33 அதி முக்கிய பிரமுகர்களுக்கு பதவி காரணமாக, விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனை இல்லை. அவர்கள், நேரே விமானத்தில் சென்று அமரலாம். இந்தியத் தூதரகங்களிலும், இவர்களுக்குப் பாதுகாப்புச் சோதனைக்கு விதிவிலக்கு உண்டு. இதே சலுகை, ராபர்ட் வதேராவுக்கும் தரப்பட்டிருக்கிறது. இவரது உடமைகள், சோதனை செய்யப்படுவதில்லை.விமான நிலையங்களில், பாதுகாப்புச் சோதனைக்கு விலக்கானவர்கள் பற்றிய அறிவிப்புப் பலகையில், வதேராவின் பெயரை பார்க்கலாம். ராபர்ட் வதேரா, எந்த அரசு பொறுப்பிலும் இல்லை; கவுரவப் பதவியும் கிடையாது. ஏன் இந்தச் சிறப்பு சலுகை?

இதை எந்த இந்திய அரசியல்வாதியும், இதுவரை எதிர்த்ததாகத் தெரியவில்லை. இந்தச் சலுகை இருந்தால், இந்தியாவிலிருந்து எதையும் கடத்தி போக முடியும். இத்தாலியில் விலை மதிப்பற்ற இந்தியப் பழம்பெரும் பொருட்கள் கிடைக்கின்றன. இவர், இத்தாலியில் இப்படிப்பட்ட கடை வைத்திருக்கிறார்.ராபர்ட் வதேராவுக்கு, "யூனிடெக்' நிறுவனத்தில் பங்குகள் உண்டு என்கிறார் பெயரை வெளிக்காட்டாத, ஒரு அயல்நாட்டுச் செய்தியாளர். அதுமட்டுமல்ல, பல நிறுவனங்களில் பிணையற்ற கடன் பெருமளவுக்கு வாங்கியிருக்கிறார். ஓட்டல்கள் நடத்துகிறார்; சொந்த விமானங்கள் வைத்திருக்கிறார். அவற்றை வாடகைக்கு விட்டுச் சம்பாதிக்கிறார். புகாரும் இல்லை; திகாரும் இல்லை. மகிழ்ச்சியுடன் வெளியே இருக்கிறார்.

சி.பி.ஐ.,யின் கரங்கள், இவரை நெருங்க முடியாது. சி.பி.ஐ.,யை இயக்கும் பிரதமர் மன்மோகன் சிங்கை, அந்த பதவியில் நியமித்ததே, இவரது மாமியார் தானே. இதையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டியவர்கள், 100 கோடி இந்திய மக்கள்.எகிப்தில், டுனிஷியாவில் வெடித்தது போல், இந்தியாவிலும், மக்கள் புரட்சி வெடிக்க வேண்டும். இரண்டாவது சுதந்திரப் போராட்டம் பிறக்க வேண்டும். காந்தி போன்றவர்களால்... போலி காந்திகளால் அல்ல!

கெஜ்ரிவாலும், பூஷணும் கேள்விகள் எழுப்பிய பின், அரியானா முதல்வரைக் கூப்பிட்டு, சோனியா பதில் சொல்லச் சொல்லியிருக்கிறார்.இப்போதும், சோனியா நேரடியாக எதுவும் சொல்லவில்லை. மருமகனைச் சொல்லவிடவில்லை. எல்லாவற்றிலும், பயன் இவருக்கு; பழி மற்றவர்களுக்கு என்றிருக்கும் போது, மற்றவர்களே பதில் சொல்லிவிட்டுப் போகட்டுமே என்றிருக்கிறார். என்ன நிர்வாகம், இந்த நிர்வாகம்?

தினந்தோறும் பயனுள்ள, பயனற்ற விவாதங்களை நாள் முழுவதும் நடத்தும் சேனல்காரர்கள், எத்தனையோ பெருந்தலைகளை அழைத்தும், கிடுக்கிப்பிடி போட்டிருக்கின்றனரே. விழிகளையும், விரல்களில் பென்சிலையும் உருட்டும் சேனல் கேள்வியாளர்கள், இதுவரை சோனியாவை விட்டு வைத்துள்ளதன் மர்மம் என்ன?மன்மோகன் சிங் வெறும் முகமூடி. சோனியாதான் சூத்ரதாரி என்பது, அத்வானி உட்பட, எல்லாருக்கும் தெரியுமே. அவர்கள் கூட, ஏன் சோனியா மீது பாயாமல், மன்மோகன் சிங்கையே மீண்டும் மீண்டும் நோண்டுகின்றனர்? எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் ஏன் வாய் திறக்கவில்லை? அவர்களில் பலர் அமைச்சர்களாக இருந்தவர்கள். மீண்டும், அமைச்சர்களாகப் போகிறவர்கள். அவர்கள் வீட்டுக் கொட்டில்களிலும் கன்றுக்குட்டிகள் இருக்கின்றன!
Email: hindunatarajan@hotmail. com

ஆர்.நடராஜன்,கட்டுரையாளர், அமெரிக்கத் தூதரக முன்னாள் அரசியல் ஆலோசகர்

Thursday 11 October 2012

இறைவன் எப்போது அழுகிறார்?

கண்ணீருடன் பெருமாள்: திருக்கோட்டியூர் நம்பி என்ற வைஷ்ணவ அடியார் எழுதிய வார்த்தா மாலை என்ற கிரந்தத்தில் வரும் ஒரு பாடல் பெரும் உண்மைகளைக் கூறும். கடவுள் மனிதனைப் படைத்து ஏதோ ஒரு மகத்தான காரியத்தைப் புரிய உலகிற்கு அனுப்புகிறார். ஆனால் அவன் இங்கு வந்ததும் எந்நேரமும் எதையாவது பிடித்துக் கொண்டுச் சுற்றித் திரிகிறான். எதற்காக? அனைத்தும் வயிற்றுக்காகத்தான். உணவு உடலுக்குப் போகிறது. அவ்வுடல் ஆண்டு அனுபவித்த பின் இறுதியில் மண்ணிற்குப் போகிறது. இறைவன் அளித்த உயிரோ கர்மத்தோடு போகிறது. நல்லவை செய்திருந்தால் நல்லவிதமாகப் போகும். தீயதைச் செய்திருந்தால் தீயதாகப் போகும். இப்படி, தான் படைத்த மனிதன் மண்ணோடும் கர்மத்தோடும் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்வதைப் பார்த்து, இறைவன் உயர்ந்த காரியம் செய்ய உலகிற்கு அனுப்பி வைத்தேன்; இவன் இப்படி ஆகிவிட்டானே! என்று கண்ணீர் வடிப்பாராம்.
இதனை திருக்கோட்டியூர் நம்பி கூறுகிறார்:
விருத்தி சோறோடே போகும்
சோறு உடம்போடே போகும்
உடம்பு மண்ணோடே போகும்
உயிர் கர்மத்தோடே போகும்
ஈஸ்வரன் கண்ண நீரோட கை வாங்கும்.
உலகியலில் உழன்று லவுகிக நினைவுகளிலேயே ஊறிக் கிடப்பவர்களைப் பார்த்து தெய்வம் சிரிக்கிறது - பரிகாசமாக!
Bookmark and Share

Monday 1 October 2012

சமாதானத்தின் தூதுவன்:இன்று காந்தியடிகள் பிறந்த தினம்

இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகத்துக்கே அகிம்சையை கற்றுக்கொடுத்த, இந்தியாவின் தேசத்தந்தை என அழைக்கபடும் காந்தியடிகளின் பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இன்று உலகுக்கு தேவைப்படுவது, காந்தியடிகள் பின்பற்றிய "அகிம்சை' தான். மகாத்மா காந்தி, 1869 அக்., 2ம் தேதி, குஜராத்தின் போர்பந்தரில் பிறந்தார். 1883ல் தனது 13 வயதில் காந்தி, கஸ்தூரிபாய் என்பவரை திருமணம் செய்தார். பள்ளிக்கல்வியை முடித்தபின், உயர்கல்விக்காக 1888ல் லண்டன் சென்றார். அங்கு பாரிஸ்டர் பட்டம் பெற்று இந்தியா திரும்பினார். சில காலம் மும்பையில் வக்கீலாக பணியாற்றினார்.


தென் ஆப்ரிக்காவில் 21 ஆண்டுகள்:


பின் 1893ல், வேலைக்காக தென்னாப்பிரிக்கா சென்றார். அப்போது அங்கு ஆங்கிலேயர்களின் நிறவெறி மற்றும் இனப்பாகுபாடு அதிகமாக இருந்தது. வெள்ளையர் அல்லாத காரணத்தால், காந்தியடிகளும் பலமுறை பாதிக்கப்பட்டார். அங்குள்ள இந்தியர்களையும், கறுப்பின மக்களையும் ஒன்றினைத்து "சத்யாகிரகம்' எனும் அறவழிப் போராட்டம் மூலம் அம்மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதன் பின், இந்தியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற ஆங்கிலேய அரசு முன்வந்தது. தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர்களின் நிலையை மேம்படுத்தும் முயற்சியில் வெற்றி கண்ட காந்தியடிகள் 21 ஆண்டுகளுக்குப் பின், 1915ல் நாடு திரும்பினார்.


இந்திய சுதந்திர போராட்டம்:


இந்தியா ஆங்கியேர்களிடம் அடிமைப்பட்டு கிடந்தது. நாடு முழுவதும் ஆங்கிலேயர்களை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தனர். இதைக்கண்ட காந்தி காங்., கட்சியில் சேர்ந்து சுதந்திரப் போராட்டத்தில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டார். 1920ல் காங்., கட்சியின் தலைவராகவும் இருந்தார். ரவிந்திரநாத் தாகூர், கோபாலகிருஷ்ண கோகலே, நேரு, ஜின்னா, வல்லபாய் படேல், அம்பேத்கார் உள்ளிட்ட பல தலைவர்களுடன் இணைந்து சுதந்திர போரட்டத்தை நடத்தினார். நாடு முழுவதும் பயணம் செய்து மக்களிடம் சுதந்திர தாகத்தை ஏற்படுத்தியதில் காந்தியின் பங்கு முக்கியமானது. சத்தியாகிரகம், ஒத்துழையாமை இயக்கம், தண்டி யாத்திரை, வெள்ளையனே வெளியேறு போன்ற அறப் போராட்டங்களின் மூலம் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடினார். இறுதியில் 1947 ஆக., 15ல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது.


இறுதி வரை போராட்டம்:


இந்தியா சுதந்திர தினத்தை கொண்டாடிய வேளையில் காந்தியோ இந்தியா - பாக்., பிரிவினையை கண்டு மனம் வருந்தினார். உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டார். இறுதியில் 1948 ஜன., 30ம் தேதி, காந்தியடிகள் வழிபாடு முடிந்து வெளியே வந்த போது, நாதுராம் கோட்சே என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது நினைவு தினம், உலக அகிம்சை தினமாக கடைபிடிக்கப்படுகிறது.


வாய்மையே ஜெயிக்கும்:


மகாத்மா காந்தி ஒன்றும் வசீகரத்தோற்றம் உடையவரில்லை, கையில் எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தியதில்லை. ஆனாலும் ஆங்கிலேய அரசு அவரைக் கண்டு பயந்தது. இந்திய மக்கள் அனைவரும் அவரது கட்டளைக்கு கீழ்படிந்தனர். ஏனெனில் அவரது நேர்மை மற்றும் துணிவு. இவர் நினைத்திருந்தால் செல்வந்தராகவே வாழ்ந்திருக்கலாம். ஆனால் விவசாயிகள் அரை ஆடை அணிந்திருந்ததைப் பார்த்து, தானும் அரையாடை மனிதனாக மாறினார். இதுதான் இவரை மகாத்மாவாக மாற்றியது. "வாய்மையே வெல்லும்' என்ற வரிக்கு ஏற்ப கடைசி வரை, உண்மையாகவே வாழ்ந்தார். நாட்டு மக்களும் இதனை பின்பற்ற வேண்டும்.