பெருமாள் கோயிலில் பக்தர்களின் தலையில் சடாரி வைப்பதைப் பார்த்திருப்பீர்கள். இதன் தத்துவத்தை உணர்ந்து சடாரியை ஏற்பது அவசியம். ஆழ்வார்களில் நம்மாழ்வார் குறிப்பிடத்தக்கவர். இவருக்கு மாறன் சடகோபன் என்றும் பெயருண்டு. ஸ்ரீரங்கம் நம்பெருமாள் இவரை, நம் சடகோபன் என்று அன்போடு அழைத்ததால் நம்மாழ்வார் என்னும் சிறப்பைப் பெற்றார். பெருமாளின் திருவடியாகவே இவரைப் போற்றுவர். இதன் அடையாளமாக, தரிசனத்தின்போது பக்தர்களின் தலையில் சடாரி வைப்பது வழக்கம். சடாரியின் மேலே பெருமாளின் திருவடிகள் இடம்பெற்றிருக்கும். இதைத்தான், அடி உதவுவதுபோல, அண்ணன் தம்பிகூட உதவமாட்டான் என்று பழமொழியாகச் சொல்வார்கள். அடி என்பது கடவுளின் திருவடிகளைக் குறிக்கும். பெருமாளின் திருவடி சம்பந்தம் நம்மைக் கரை சேர்க்கும் என்பதே சடாரி ஏற்பதன் நோக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment